காத்தான்குடி விளக்கமறியல் கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு

காத்தான்குடியைச் சேர்ந்த விளக்கமறியல் கைதியொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த குறித்த கைதி, கடந்த வியாழக்கிழமை (28) காலை மரணமடைந்துள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

56 வயதான மேற்படி விளக்க மறியல் கைதி, புதிய காத்தான்குடி-இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்தவர்.

சுகயீனமுற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

கைதியின் சடலம், அவரது உறவினர்களிடம் வெள்ளிக்கிழமை (29) கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *