நுணாவில் ஐ.ஓ.சியில் இன்று கிராம அலுவலர்களுக்கு பெற்றோல் விநியோகம்!

சாவகச்சேரி நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டத்திலுள்ள கிராம அலுவலர்களுக்கு கியூ.ஆர் கோட் அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.

இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை கிராம அலுவலர்கள் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள முடியும் என நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

கிராம அலுவலர்களின் அர்ப்பணிப்பான பணியையும், அவசியத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டதாகவும், கிராம அலுவலர்கள் தம்மை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இதன்போது தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு அமைய கீழ் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் அடிப்படையில், நெடுந்தீவு 09.00.am- 09.30 am வரை, வேலணை 09.30 am – 10.00 am வரை, காரைநகர் 10.00 am – 10.30 am வரை, ஊர்காவற்துறை 10.30 am – 11.00 am வரை, யாழ்ப்பாணம் , நல்லூர் 11.00 am – 11.30 am வரை, சண்டிலிப்பாய் , சங்கானை , உடுவில் 11.30 am – 12.00 pm வரை, தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி 12.00 pm – 12.30 pm வரை, கரவெட்டி , பருத்திதிதுறை , மருதங்கேணி 12.30 pm – 01.00 pm வரை பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *