குரங்கு அம்மை தொற்றாளர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பம்!

குரங்கு அம்மை (Monkeypox) தொற்றாளர்கள் நாட்டில் காணப்படுகின்றார்களா என்பது தொடர்பில் நாளை ( திங்கட்கிழமை) முதல் பரிசோதிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ தொழிநுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி சகோதரமொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொரளை மருத்துவ ஆராச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *