ஜோசப் ஸ்டாலின் கைது சட்டப்பூர்வமானது – ஜனாதிபதி ரணில்

ஜோசப் ஸ்டாலினைக் கைது செய்திருப்பது சட்டப்பூர்வமானது என்றும் அது குறித்து அவரிடம் பேசியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இருப்பினும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வேண்டும் என பேசும் போராட்டக்காரர்களை பாராட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போராட்டத்தினால் நல்லவை மட்டுமல்ல தீமையும் நடந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நல்லதை மட்டும் வைத்துவிட்டு, கெட்டதைப் புறக்கணிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், சட்ட அமுலாக்கத்தில் குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாடி தீர்வை காண்போம் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *