
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மாகாணங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும்.
அத்தோடு, புத்தளம், கொழும்பு மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காற்று, மழை மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதுதொடர்பில் 117 எனும் இலக்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்