இந்தியாவிலிருந்து குரங்கு அம்மையை கண்டறியும் கருவிகள் இலங்கைக்கு!

இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு குரங்கு காய்ச்சலைக் கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து இந்த கருவிகள் தருவிக்கப்பட்டன.

இலங்கையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த கருவிகள் பெறப்பட்டுள்ளன.

உலகின் பல நாடுகளில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து உலக சுகாதார அமைப்பு, கடந்த ஜூலை 23 ஆம் திகதியன்று குரங்கு காய்ச்சல் தொடர்பில் அவசரநிலையை அறிவித்தது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *