
சீனக் கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகளைச் சந்திப்பதற்கான அவசர வேண்டுகோளை சீனத் தூதரகம் விடுத்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ‘யுவான் வாங் 5’ என்ற சினக் கப்பல் வரவுள்ள நிலையில், அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையிலேயே இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை சீன தூதரகம் கோரியுள்ளது.