
பொதுநலவாய போட்டிக்காக பிரிட்டன் சென்றுள்ள பத்து வீரர்கள் ஓட்டம்; தேடும் பணிகள் ஆரம்பம்
பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரிட்டன் சென்றுள்ள இலங்கை அணியின் 10 வீரர்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஏ.எப்.பி. செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அவர்களில் 3 பேர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர். ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை பொலிஸார் கண்டுபிடித்தாலும், அவர்களுக்கு 180 நாள்கள் நுழைவிசைவு இருந்ததால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலை காரணமாக வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்கள் அணியில் இருந்து வெளியேறியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.