
மன்னார்,ஓக 09
இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி டீசலை மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சைட்சிட்டி பகுதியில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
595 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அனுமதியற்ற இந்த டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக லொறி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரிய வந்தது.
டீசல் கையிருப்புடன் மன்னார் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.