பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம்: எம்.பிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?- பந்துல விளக்கம்!

சொத்து சேதம் மற்றும் பாராளுமன்றம் தொடர்பான ஏனைய சம்பவங்களை நாட்டின் வழமையான சட்டத்தின் கீழ் கையாள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே பேச முடியும் என்றும், நீதிமன்றத்தால் கூட கேள்வி கேட்க முடியாது என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெறும் எந்தவொரு சம்பவமும் சபாநாயகரால் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் குணவர்தன, அதன் பின்னர் பாராளுமன்றத்தினால் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படாவிட்டால், சபாநாயகரிடம் இருந்து இதுதொடர்பான கேள்விகள் கேட்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

முன்னாள் அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உடமைகளை சேதப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படாத வேளையில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை அழிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகள் நடத்தப்படுவது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *