பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனமும் பெற்றோலிய அமைச்சரும் எரிபொருள் பிரச்சினையில் எதையோ மறைக்கின்றனர் என்பது அவர்களின் நடத்தையில் இருந்து தெளிவாகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கின்ற போதிலும் அதனை வழங்க முடியுமா? இல்லை? அமைச்சர் விசாரணை கூட செய்யாதது பிரச்சினை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் கதையில் உண்மை உள்ளதா? இல்லை? இதுபற்றி கண்டறிய தணிக்கை செய்ய வேண்டியிருந்தாலும், இந்த மறைக்கப்பட்ட உண்மையால் அது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
கியூஆர் முறைப்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் குறைக்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் கூறினார்.
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் இருந்தும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் செல்வாக்கு காரணமாக அவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகள், விவசாயிகள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய மக்கள் போதியளவு எரிபொருள் கிடைக்காததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் நாணயக்கார தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசாங்கம் செயற்படுகின்ற போதிலும் அவ்வாறானதொரு அரசாங்கத்தை அமைக்க அவர்கள் தயாரில்லை என்பது அவர்களின் செயற்பாடுகள் மூலம் தெரிகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பிற செய்திகள்