முட்டை தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பு, ஓக 10

முட்டையின் விலை உயர்வைக்
கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து
குறைந்த விலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது முட்டை ஒன்றின்
விற்பனை விலை இலங்கைப் பெறுமதியில் சுமார் 18 ரூபாவாக உள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்து இந்த நாட்டில் ஒரு முட்டையை 20 ரூபாவுக்கு வழங்க முடியும்.
தற்போது இங்கு ஒரு முட்டையின் விலை 58 தொடக்கம் 65 ரூபாவாக உள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் மக்களைச்
சுரண்டுவதற்கு இடமளிப்பதை அரசாங்கம்
மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க
கூடாது என்றும் அந்தச் சங்கம்
தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *