
மின்கட்டணம் மற்றும் தண்ணீர்க் கட்டணம் ஆகியவற்றின் அதிகரிப்பைத் தொடர்ந்து தற்போது தபால் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தபால் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
அதன்படி 15 ரூபாவாகவிருந்த சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
45 ரூபாவாக இருந்த பதிவுத் தபால் கட்டணம் 110 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
அதேவேளை 250 கிராம் எடையுள்ள தபால் பொதிக்கான கட்டணம் 200 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளது.