இவ்வாண்டு அரசின் செலவினம் ரூ. 479.43 பில்லியன்

இவ்வாண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் 3ஆயிரத்து 275.8 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு சட்டவரைபு நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டவரைவின்படி அரசாங்கத்தின் செலவு 2 ஆயிரத்து 796.44 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் திருத்தப்பட்ட சட்டவரைபின் ஊடாக அரசாங்கத்தின் செலவினம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிகளவான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்துக்கான 13.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வசம் உள்ள அமைச்சுக்கு சுமார் 734 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சுக்கு 467 பில்லியன் ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்கு 376 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சுக்கு 200 பில்லியன் ரூபா, சுகாதார அமைச்சுக்கு 248 பில்லியன் ரூபா மற்றும் வர்த்தக அமைச்சுக்கு 93 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை போக்குவரத்து அமைச்சுக்கு 371 பில்லியன் ரூபா, விவசாய அமைச்சு 138 பில்லியன் ரூபா மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கு 27 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *