பங்களாதேஷில் எரிபொருள் விலை உயர்வு – மக்­கள் போராட்­டம்

இலங்­கை­யைத் தொடர்ந்து பங்­க­ளா­தே­ஷி­லும் எரி­பொ­ருள்­க­ளின் விலை­கள் 51 வீதத்­தால் உயர்த்­தப்­பட்­டுள்­ளன.

ஏற்­க­னவே பண­வீக்­கத்­தால் நெருக்­க­டிக்­குள்­ளான பங்­க­ளா­தேஷ் மக்­க­ளுக்கு இந்த எரி­பொ­ருள் விலை அதி­க­ரிப்பு மற்­றொரு பேரி­டி­யாக அமைந்­துள்­ளது.

அதன்­படி ஒக்­ரேன் ரக ஒரு லீற்­றர் பெற்­றோல் வ।ிலை 135 டக்­கா­வாக உயர்­வ­டைந்­துள்­ளது. இது முந்­தைய விலை­யான 89 டக்­காவை விட 51.7 சத­வீ­தம் அதி­க­மா­கும்.

அத்­து­டன் ஒரு லீற்­றர் பெற்­றோ­லின் விலை 130 டக்காவாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. அதே­வேளை டீசல் விலை­யும் 50 சத­வீ­தத்­துக்கு மேல் அதி­க­ரித்­தது.

இந்­த­நி­லை­யில் இதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் பங்­க­ளா­தேஷ் நக­ரங்­க­ளின் வீதி­யில் இறங்­கிப் போராடி வரு­கின்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *