இலங்கையைத் தொடர்ந்து பங்களாதேஷிலும் எரிபொருள்களின் விலைகள் 51 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே பணவீக்கத்தால் நெருக்கடிக்குள்ளான பங்களாதேஷ் மக்களுக்கு இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றொரு பேரிடியாக அமைந்துள்ளது.
அதன்படி ஒக்ரேன் ரக ஒரு லீற்றர் பெற்றோல் வ।ிலை 135 டக்காவாக உயர்வடைந்துள்ளது. இது முந்தைய விலையான 89 டக்காவை விட 51.7 சதவீதம் அதிகமாகும்.
அத்துடன் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 130 டக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளை டீசல் விலையும் 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தது.
இந்தநிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்களாதேஷ் நகரங்களின் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.