கல்வித் துறையில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்! – டலஸ்

தசாப்தகால பிரச்சினையாக மாறுவதற்கு முன்னதாக கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தனிநபர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு காணமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் கல்வி நெருக்கடிக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்படாத நிலையில், அது தலைமுறைகளை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயத்தினை அரசியல்வாதிகளின் கண்ணோட்டத்தில் பார்க்காமல், பாடசாலையில் பணியாற்றும் ஊழியர்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தலைத்துவத்தை ஏற்பதற்கு முன்வருமாறு பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.

இந்த அழைப்பினை ஏற்பதற்கு பெரும்பாலானவர்கள் விரும்பியபோதும் தயக்கம் காட்டியதாக அமைச்சர் சுட்டுக்காட்டினார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சமடையவில்லை எனவும், தமது தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் அரசியல் எதிர்காலத்தை புறக்கணித்து சவாலை ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *