அனைத்து தகவல் தொடர்பு சேவைகளின் விலைகளும் அதிகரிக்கப்படும்

கொழும்பு,ஓக 10

மின்சாரக் கட்டணத்தின் நியாயமற்ற அதிகரிப்பு காரணமாக, அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) போட்டோ பிரதி மற்றும் பிரிண்ட் அவுட் கட்டணங்களை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அண்மைக்கால மின்வெட்டுகளால் தமது தொழிலை முன்னெடுப்பதில் தாங்கள் நெருக்கடியான நிலையில் உள்ளதாக ACCOA தலைவர் இந்திரஜித் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

போட்டோ கொப்பி செய்யும் பேப்பரின் ஒரு பண்டல் விலை ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர மின் கட்டண உயர்வும் எங்களை அதிகமாக பாதித்துள்ளது . எனவே எமது சேவைக்கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

எனினும் எங்கள் வாடிக்கையாளர்களின் மீது சுமையை இறக்க நாங்கள் விரும்பவில்லை, ஆனால் இந்த ஆட்சியாளர்கள் சர்வாதிகாரிகளாக செயல்படுகிறார்கள், எங்களை போன்ற சிறு வணிகர்களின் அவலத்தை அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள், என்றும் அவர் கூறினார்.

இன்று முதல் மின்சார கட்டணத்தை பாரியளவில் 75% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களின் சம்பளம் மற்றும் வருமானத்தில் அதிகரிப்பு இல்லை, ஆனால் அவர்களின் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

எனவே, அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டுப் பொருட்களின் விலைகளை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று பெரேரா மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *