அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு

கொழும்பு,ஓக 10

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுக்கள் நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுக்கள் தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட சட்டத்தரணி ராஜீவ் குணதிலக்க நீதிமன்றில் தெரிவித்ததோடு, மேற்படி மனுவை பரிசீலிக்க ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மனுதாரர்கள் இடைக்காலத் தடை கோரியதால், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விண்ணப்பங்களை அழைக்குமாறு அரச சிரேஷ்ட வழக்கறிஞர் கோரினார்.

எனினும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுக்கள் அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அவற்றை தாமதமின்றி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் பிரதிவாதிகளாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *