ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ரூ.16 மில்லியன் நட்டம்

கொழும்பு,ஓக 10

நாட்டில் கடந்த வாரங்களில் பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதால், சுமார் 16 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசனங்கள் முற்பதிவு செய்யப்படும் பதுளை – கொழும்பு ரயில்களும் இரத்து செய்யப்பட்டதால், நாளாந்தம் 2 மில்லியன் ரூபா  நட்டம் ஏற்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இந்த நட்டம் பதிவாகியுள்ளது.

நாவலப்பிட்டி – நானுஓயா இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட இடையூறுகளால், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த ரயில்களையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு – பதுளை இடையிலான தபால் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *