
கொழும்பு, ஓக 11
நீதிமன்றத்தை அவமதித்தமையை ஒப்புக்கொண்டு சத்தியக் கடதாசியை சமர்ப்பித்த பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவை, பொது மன்னிப்பில் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வருகிற நிலையில், நன்னடத்தை மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பு செய்வாராக இருந்தால் அவருக்கு பொதுமன்னிப்பை வளங்களுவது நியமானது என விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை பெறப்பட்டதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனையால் நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிடாத வகையில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.