பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அம்பத்தளை ஏரிக்கு அருகில் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட விசேட துப்பாக்கி மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கி திட்டமிட்ட குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று (10) கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்