நெஷனல் பேங்க் டென்னிஸ்: இரண்டாவது சுற்றில் டேன் எவண்ஸ் வெற்றி- செரீனா தோல்வி!

நெஷனல் பேங்க் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டிகளில், பிரித்தானியாவின் டேன் எவண்ஸ் வெற்றிபெற்றுள்ளதோடு, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்துள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் டேன் எவண்ஸ், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வை எதிர்கொண்டார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் டேன் எவண்ஸ், வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சுவிஸ்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை எதிர்த்து களமிறங்கினார்.

இதில் பெலிண்டா பென்சிக், 6-2, 6-4 என செட்டைக் கைப்பற்றி, செரீனாவை தோற்கடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *