கொழும்பு பேராயருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுநோயால் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கையில் கடந்த தினத்தில் புதிதாக 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *