
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் ஊடாக நடாத்தப்பட்டு வரும் மாகாண விளையாட்டு போட்டில் கரப்பந்தாட்ட போட்டியில் தம்பலகாமம் பிரதேச அணியினர் Runner up ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற குறித்த போட்டியில் தெரிவாகினர்.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டு தளுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.டி.ஹாரீஸ் திறம்பட வழி நடாத்தி வந்ததுடன் பயிற்சியினையும் அளித்தார். இரு வருடங்களின் பின் வரலாற்றில் இவ் வெற்றியினை முடி சூடியுள்ளதாககவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இம் மாகாண விளையாட்டு போட்டிகள் யாவும் மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம் பெற்று வருகிறது. இதில் திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களை சேர்ந்த அணியினர் பலப் பரீட்சை நடாத்தினர்.
பிற செய்திகள்