
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்
ணெய் சுத்திகரிப்பு நிலையம் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் செயற்படத் தொடங்கினால் இன்னும் இரண்டு மூன்று நாள்களில் மண்ணெண்ணெயை உற்பத்தி செய்ய முடியும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:–
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் வழங்க முடியாத போதிலும், சந்தையில் விநியோகிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பு விநியோகம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு விடுவிக்கப்பட்ட மண்ணெண்ணெயை ,தனியார் பேருந்துகளை வைத்திருப்பவர்கள் கொள்வனவு செய்து டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் மூலம் பேருந்துகளை இயங்கியுள்ளனர்.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 87 ரூபாவுக்கு விற்பனை செய்வதால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை இனியும் தாங்க முடியாதது. எதிர்காலத்தில் விலை மாற்றி அமைக்கப்படும்.
மண்ணெண்ணெய் விலை திருத்தம் செய்யப்பட்டவுடன் மீனவ சமூகம், பெருந்தோட்டக் கைத்தொழில்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்= என்றார்.