
கொழும்பு,ஓக 11
சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கடதாசி தட்டுப்பாடு, மாதாந்தம் பல மில்லியன்
ரூபாக்களை சேமிப்பது, எதிர்காலத்தில் கட்டாய நடைமுறையாக வரவுள்ள
தொழிநுட்ப முறைக்குள் பொது மக்களை பழக்கப்படுத்துவது போன்ற பல்வேறு
காரணிகளை கவத்தில் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது
தமது வாடிக்கையாளர்களை மின் இதழ் கட்டணப் பட்டியல் e-Bill முறைக்கு
மாற்றம் செய்யவுள்ளது.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு
தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பொது மக்கள் மின்
இதழ் கட்டணப் பட்டியல் e-Bill முறைக்கு மாறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய
இலகுவான நடிவடிக்கைள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.