சம்பந்தன் இதுவரை தமிழ் மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை- வீ.ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செய லாளர் வீ . ஆனந்தசங்கரி தெரிவித்தார் .

நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந் திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு குறைந்து கொண்டே செல்கின்றது. இதனை நான் கூறவில்லை அண்மைக் காலங்களில் இடம் பெற்ற தேர்தல் முடிவுகள் இதனை நன்கு உணர்த்துகின்றன.

தமிழ் மக்களுக்காக உண்மையை உரத்துக் கூறி பண பெட்டிகளுக்கு விலை போகாத தந்தை செல்வாவினால் வழி நடத்தப்பட்ட பழம்பெரும் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதை யாரும் மறக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தாமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு விடயங்களை தாமே நிறை வேற்றப்போகிறோம் எனக் கூறிவரும் தலைவர் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இதுவரை தமிழ் மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொடு க்கவில்லை .

இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மூன்று இலட்சம் பேர் வன்னி யுத்த பூமியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என இலங்கை அரசுக்கு எடுத்துக்கூறியவன் நானே . இறுதியுத்தத்தில் உயிர் சேதங்கள் ஏற்படப் போகின்றது என தெரிந்தும் மகிந்த ராஜபக்ஷவு டன் பேச்சு வார்த்தைக்கு வருமாறு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்தபோது எவரும் முன்வரவில்லை .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பசில் ராஜபக்சவை சந்திக்க சென்ற போது ஆனந்தசங்கரி சொல்லித்தான் எமக்கு மூன்று இலட்சம் பேர் அங்கு அகப்பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்ததாக கூறினார் .

பணத்துக்காக பதவிக்காக தமிழ் மக்களை என்றும் நான் விற்றதில்லை . அவ்வாறு ஆசை இருந்தவனாக இருந்திருந்தால் இரண்டு தடவைகள் தேசியப்பட்டியல் மூலம் மாவை . சேனாதிராஜாவை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *