
சீனாவின் யுவான் வாங்-5 ஆய்வுக் கப்பலின் இலங்கை விஜயம் தொடர்பில் உயர்மட்ட இராஜதந்திர தலையீடு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென முன்னாள் இராஜதந்திர அதிகாரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
விசேட பிரதிநிதி ஒருவர் உடனடியாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் சென்று இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைநிலைத் தீர்வை எட்டுவது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சீனாவின் யுவான் வாங் – 5 என்ற ஆராய்ச்சிக் கப்பல் குறித்து செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அது நேற்று காலை 9:30 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையும் என இந்தியாவின் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. செய்திச் சேவை தெரிவித்திருந்தது.
இந்தக் கப்பல் ஆராய்ச்சிக் கப்பல் என்று அழைக்கப்பட்டாலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் திறன் மற்றும் செயற்கைக்கோள் பொருத்துதல் போன்றவற்றால் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இந்தியா தனது கருத்தை வெளிப்படுத்தியது.
இதன்காரணமாக இந்த கப்பலின் வருகை தொடர்பில் இந்தியாவின் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு அரசாங்கம் சீனாவிற்கு அறிவித்திருந்தது.
இதேவேளை, குறித்த கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும் என சுயேட்சை கட்சிகள் அறிக்கையொன்றை வெளியிட்டன.
இந்த அறிவிப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் சுயேச்சைக் குழுவின் எட்டு பிரதிநிதிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் போர்க்கப்பலும் இன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்