யாழில் உயர்தர பரீட்சை முடிவுகளில் குறைந்த புள்ளி வந்துவிடும் என்ற அச்சத்தில் உயிரை மாய்த்துகொண்ட மாணவி!

யாழில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றிய மாணவி குறைந்த புள்ளிகள் வந்து விடும் எனும் அச்சத்தில் உயிரை மாய்த்துள்ளார்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவி குறித்த பகுதியையுடைய உதயசங்கர் நிவேதிகா (22) என்ற மாணவி என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மாணவி மருத்துவப் பிரிவில் 3வது தடவையாக க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியதன் பின் பரீட்சை முடிவுகள் வெளியாகும் முன்னர் உயிரை மாய்த்துள்ளார்.

மேலும் குறித்த மாணவி இம்முறையும் தனக்கு குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் இருந்ததாக அவரின் பெற்றோர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *