உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்!

உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க வேண்டும் எனில் உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக சில வியாபாரிகள் முட்டையை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் முட்டை விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

விலை அதிகரிப்பு காரணமாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வறியவர்கள் அவர்களுக்கு தேவையான புரதங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய போக்கு தொடர்ந்தால் போராட்டங்கள் இடம்பெறலாம் என்பதனால் முட்டையை இறக்குமதி செய்து விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *