மத்திய கலாசார நிதியத்தினால் மட்டக்களப்பு நெளுகல தொல்பொருள் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியின் அறிக்கையை முன்னிலைப்படுத்தி தேசிய பாரம்பரிய, கலை மற்றும் கிராமிய கலை இராஜாங்க அமைச்சில் நேற்று (16) முன்னெடுக்கப்பட்டது.
இந்த அறிக்கையை மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோரிடம் வழங்கினார்.
தொல்பொருள் தளத்தில் உள்ள பழைய கட்டிடங்கள், தொட்டிகள், ஸ்தூபிகள் மற்றும் ஆசனகாரங்கள் உட்பட தொல்பொருள் மதிப்புள்ள பல தகவல்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
கோறளைப்பற்று மேற்கு பிராந்திய செயலகத்திற்கு உட்பட்ட வடமுனை கிராம சேவை களத்தில் அமைந்துள்ள நெலுகல தொல்பொருள் தளம் 2000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
அதற்கமைவாக, தற்போது முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இங்கு தெரிவித்தார்.
மேலும், தொல்லியல் துறைக்கு சொந்தமான காணியை இரண்டு வாரங்களுக்குள் பிரித்து வழங்குமாறும் நிகழ்வில் கலந்து கொண்ட தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்கவுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தொல்பொருள் இடத்தைப் பாதுகாத்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வழிபடுவதற்குத் தேவையான இடத்தை விரைவில் தயார் செய்யுமாறு மாகாண ஆளுநர் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் வணக்கத்திற்குரிய கடகும்புரே தம்மாராம தேரர், இராஜாங்க அமைச்சர் நிஷாந்தி ஜயசிங்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



பிற செய்திகள்