
பெண்ணொருவரை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்தமை தொடர்பில் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், அமுலாக்கத்துறையினரால் டெல்லி நீதிமன்றில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி சுகேஷ் சந்திரசேகர் மேற்படி பணத்தை பெற்றுள்ளதாகவும், அவற்றை பொலிவூட் நடிகைகளுக்காக செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சுகேஷுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில பரிசுப் பொருட்களைப் பெற்றது தெரியவந்தது.
கைது, செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், குதிரை, 15 ஜோடி காதணிகள், 5 ஆடம்பர பை, மிகவும் அதிக விலை மிக்க 4 பூனைக்குட்டிகள் போன்ற பல பரிசுப்பொருட்களை வழங்கினார்.
அத்துடன், ஜாக்குலின் சகோதரிக்கு ரூ.1.50 லட்சம் அமெரிக்க டொலர்களும், ரூ.15 லட்சம் ஜாக்குலின் சகோதரருக்கும் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்தது அமுலாக்கப்பிரிவு விசாரணையில் தெரிய வந்தது.
இதற்காக அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலினை பல முறை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ், தான் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியதை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார்.
இதனால், அவர் வெளிநாடு செல்ல அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஜாக்குலின் அடிக்கடி தனி விமானத்தில் சென்னை வந்து செல்ல சுகேஷ் பல கோடி ரூபாவை செலவு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களைபணச்சலவை சட்டத்தின் கீழ்முடக்கியுள்ளனர்.
இதில் ஜாக்குலின் பெயரில் வங்கிகளில் இருந்த ரூ.7.12 கோடி மதிப்புள்ள நிலையாக வைப்புகளும் அதில் அடங்கும். அதோடு தொழிலதிபரின் மனைவியிடம் மிரட்டிப் பறித்த பணத்தில் சுகேஷ் ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு கொடுத்திருப்பதாக அமுலாக்கப்பிரிவு கணித்துள்ளது.
மேலும், சுகேஷ் சிறையில் இருந்து ஒரு ஆண்டு வெளியில் வந்த போது ஜாக்குலின், சுகேஷ் இருவரும் அடிக்கடி சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
டிடிவி தினகரனிடம், இரட்டை இலை சின்னத்தை வாங்கித்தருவதாகக்கூறி பல கோடி ரூபாயை சுகேஷ் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இலங்கையரான ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2009 இல் இந்தி திரையுலகில் நடிகையான அறிமுகமானார்.
குறித்த, இந்த வழக்கில் மொத்தம் 8 பேரை அமுலாக்கத்துறை கைது செய்துள்ளது. இவர்களில் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா போல் ஆகியோரும் அடங்குவர்.
பிற செய்திகள்