மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த சில ஆண்டுகளாக நோயாளிகள் இரத்த பரிசோதனை சேவைகள் இல்லாமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.1972, ம் ஆண்டு முதல் இவ் வைத்திய சாலையில் தொடர்ந்து ஆய்வு கூட சேவைகள் இடம் பெற்றது.
இச் சேவை கடந்த 2005, முதல் அங்கு கடமையாற்றிய ஆய்வு கூட உத்தியோகத்தர் இளைப்பாறிய பின்னர் பின்னர் புதியவர்கள் நியமனம் பெற்று வரவில்லை.அக் காலத்தில் இவ் வைத்தியசாலையில் இருந்த ஆய்வு கூட உபகரணங்கள் அனைத்தும் ஹங்குராங்கெத்த வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டதாக தெரியவருகிறது.
கடந்த 2015 முதல் இவ் வைத்திய சாலையில் பணியாற்றிய மாவட்ட வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய அவர்கள் இவ் வைத்திய சாலையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு இப் பரிசோதனை மேற்கொள்ள ஆய்வு கூடம் ஏற்பட்டு செய்து வாரத்தில் இரண்டு நாட்கள் கிளங்கன் வைத்திய சாலையில் இருந்து ஆய்வு கூட அதிகாரி ஒருவர் வந்து இச் சேவையை செய்தார்.
கால போக்கில் அதுவும் இல்லை.தற்போது இப்பகுதியில் உள்ள நோயாளிகளில் இச் சேவையை பெற்றுக்கொள்ள தனியார் ஆய்வு கூடங்களில் காத்து நிற்கும் நிலையில் அதிகமான பணம் அறவிடுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் 100/= மேற்கொள்ள பட்ட இரத்த பரிசோதனை 650/= ரூபாய் வழங்க வேண்டும் எனவும் ஏனைய சேவைகள் பெற்று கொள்ள ஆயிர கணக்கில் பணம் தேவை என நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் இருந்து போல இவ் வைத்திய சாலைக்கு ரசாயனம் கூடம் தேவை எனவும் இவ் வைத்திய சாலைக்கு வரும் நோயாளிகளில் அதிகளவில் பெருந்தோட்ட மக்கள் மற்றும் கிராம வாசிகள் ஆவார்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
பிற செய்திகள்