நாட்டின் கொள்கைகளை விரும்பியவாறு மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது- வஜிர கோரிக்கை!

தனிப்பட்ட அரசியல் கட்சிகள் நாட்டின் கொள்கைகளை விரும்பியவாறு மாற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 25 வருடங்களாக மாற்ற முடியாத தேசியக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகளை வைத்திருந்தால், அவற்றை மறைத்து உடனடியாக நாட்டுக்கு முன்வைக்க வேண்டாம் என வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டு வர முடியுமா என சிலர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், தான் ஆட்சிக்கு வந்து கடந்த குறுகிய காலத்துக்குள் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி தனது திறமையை நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *