ரணில் எவ்வாறு நாட்டின் தலைவராக முடியும்? சஜித் கேள்வி

கொழும்பில் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்குச் சென்ற ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு தலைவராக முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு கயவர் என சிலர் கூறுவதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், கொழும்பு மாவட்டத்தில் தோற்று வீட்டுக்குச் சென்று ஜனாதிபதியானதால் அவ்வாறு கூறுவதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற முறை தொடர்பில் தாம் கேள்வி எழுப்பவில்லையென தெரிவித்த பிரேமதாச, அரசியலமைப்பின் பிரகாரமே இந்த நியமனம் இடம்பெற்றதாக தெரிவித்தார்.

மேலும், ராஜபக்சேவின் திருடர் கூட்டத்தை பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தால், அவர்தான் இன்று நாட்டின் அதிபராக இருப்பார் என்றும் கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *