
ஸ்கொட்லாந்தில் பெண்களுக்கு மாதவிடாய் பொருள்களை இலவசமாக வழங்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இலவசமாக மாதவிடாய்ப் பொருள்களுக்கான உரிமை சட்டபூர்வமாய் பாதுகாக்கப்படுவது உலகில் இதுவே முதன்முறை.
அதன்படி மாதவிடாய்ப் பொருள்கள் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரச அமைப்புக்கள் என பல்வேறு இடங்களிலும் மாதவிடாய்ப் பொருள்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இதற்கென ஸ்கொட்லாந்து அரசாங்கம் பல மில்லியன் பவுண்ட் செலவிடவுள்ளது.
மாதவிடாய்ப் பொருள்களை இலவசமாக வழங்குவது சமத்துவதற்கும் கண்ணியத்துக்கும் பங்காற்றும் என ஸ்கொட்லாந்து சமூக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.