புத்தளத்திலிருந்து கற்பிட்டி பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி வடிகானுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த விபத்தில் மூவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் சாரதி இதன்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

பிற செய்திகள்