
ஊசிமூலம் ஹெரோய்ன் போதைப்பொருளை உடலில் செலுத்திய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய பூசகரே இவ்வாறு நேற்றுமாலை உயிரிழந்துள்ளார்.
இவர் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் ஊசி மூலம் ஹெரோய்ன் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுநிது.
அவரது உடற்கூற்றுப் பரிசோதனையில் கையில் ஊசிமூலம் ஹெரோய்ன் போதைப்பொருளை ஏற்றியதாலேயே உயிரிழப்பு நேரிட்டுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது.