என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடன் பொறிக்குள் விழுந்திருக்கின்ற இலங்கை தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு தமிழ் மக்களோடு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வினை எட்ட வேண்டும்.தமிழ் புலம்பெயர் மக்களின் முதலீட்டு உதவிகளை பெற்றுக்கொண்டால் எந்தவிதமான கடனும் இல்லாமல் கணிசமாக கடன் பொறிக்குள் இருந்து மீள முடியும்.
ஆனால் இன்று மேற்கிந்திய நாடுகளின் கால்களில் விருக்கிறார்கள்.தமிழர்களை அளிப்பதற்காக சீனாவின் கால்களில் விழுந்து , மேற்கிந்திய நாடுகள் கொடுக்கின்ற அழுத்தங்களினால் அவர்களுடைய கால்களில் விழுகின்ற இடத்திலே சீனா திட்டமிட்டு தனக்குரிய நன்றி கடனில் இருந்து இலங்கை தப்ப முடியாது என்ற செய்தியினை கொடுப்பதற்காக தான் இங்கே கப்பலினை அனுப்பி இருக்கிறார்கள்.
73 ஆண்டுகளாக இந்த அரசாங்கம் தோற்றுப் போன கொள்கையினை கடைப்பிடிப்பதனால் வர இருக்கும் விளைவுகளை சிங்கள மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த பூகோள போட்டியினால் உள்நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லீம் மக்களிடையே பிரிவு ஒன்றும் இல்லாமல் எங்களுடைய ஒவ்வொருவரினதும் தேசங்களை அங்கீகரித்த ,எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் உருவாகினால் இந்த பூகோள போட்டியினை பொது நன்மைக்காக பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
எனவே இதனை செய்ய தவறினால் நாங்கள் எங்களுக்கிடையே அடிபடுகின்ற நிலை தொடர்ந்தால் வெளி சக்திகள் தங்களுடைய தேவைகளை அடைவதற்கு வழிவகுக்கும் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.
பிற செய்திகள்