சீரற்ற காலநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை! மஹிந்த

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலையை எதிர்கொள்வதற்கு எதிரணியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *