
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த மாதத்தின் (ஓகஸ்ட்) முதல் இரு வாரங்களில் 17,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த மே மாதத்தில் மட்டும் நாளாந்தம் 650 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் நாட்டில் அந்நியசெலாவணிகளின் புழக்கம் பெருகுவது குறிப்பிடத்தக்கது.