மோட்டார் சைக்கிள்களின் சீற்களை கழட்டிய பொலிஸார்

அம்பலாங்கொடைப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன் போது சாவியுடன் காணப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்,பின் இருக்கை மூடப்படாத மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் கைப்பற்றியதுடன்,மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் போது லோக் செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

மோட்டார் சைக்கிள் சாரதிகளின் அலட்சியத்தால் அண்மைக்காலமாக ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *