மேர்வின் சில்வா பிணையின்றி விடுவிப்பு

கொழும்பு,ஓக 18

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் இன்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் பிணை தேவையற்றது எனவும் நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முனிலையானால் போதுமானது என நீதவான் மேர்வின் சில்வாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *