வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் ஊழல்? – விசாரணைக் குழுவை நியமித்த ஆளுநர்

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு,மாகாண ஆளுநர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவர் கொண்ட விசாரணைக் குழுவை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நியமித்துள்ளார்.

குறித்த விசாரணை குழுவில் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சின் கணக்காளர் ,வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிர்வாக அதிகாரி , வட மாகாண விதை உற்பத்திக் கூட்டுறவு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *