
ரஷ்யாவின் மக்கள் சனத்தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதையடுத்து ரஷ்ய அதிபர் புடின் புதிய அறிவிப்புபொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 10 குழந்தைகள் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு 13 லட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மற்றும் உக்ரைன் போர் காரணமாக மக்கள் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்தே ரஷ்யாவில் அதிக அளவு குழந்தைகளை பெற்றெடுக்க்கும் தாய்மார்களுக்கு புதிய திட்டம் ஒன்றை ரஷ்ய அதிபர் விளாடிமின் புடின் அறிவித்துள்ளார்.
தாயொருவர் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் 13 ஆயிரம் பவுண்டுகள் வெகுமதி அளிக்கப்படும்.
10ஆ வது குழந்தையை பெற்றெடுக்கும்போது மீதமுள்ள 9 குழந்தைகளும் உயிருடன் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
இதேவேளை இரண்டாம் உலகப் போரில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் அப்போதைய தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதுபோன்ற திட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதையடுத்து இந்தப் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார் புடின்.