யாழ்ப்பாணம் நீர்வேலி பூதர்மடம் பகுதியில் இன்று பிற்பகல் ,கார் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நெல்லியடி நோக்கி பயணித்த குறித்த கார் ,வீதியை விட்டு விலகி அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதி உயர் மின்னழுத்த கம்பம் மீது மோதிய போது, காரின் எயார்பாக் (Airbag) உடனடியாக வெளிவந்தால் சாரதியும் ,அவருக்கு அருகில் இருந்து பயணித்தவரும் உயிர் தப்பியுள்ளனர். காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மின்சார சபை ஊழியர்கள் மின்கம்பத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிற செய்திகள்