தம்பலகாமம் பகுதியில் இரு யானைகளின் உடலம் மீட்பு!

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் இறந்த நிலையில் யானைகளின் இரு உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு ஆண் யானைகளின் உடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

சுமார்; 20 வயது மதிக்கத்தக்க இவ் யானைகளில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மின்சார யானை வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த இடத்துக்கு வின விலங்கு ஜீவராசி திணைக்களத்தினர் சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *