சி.ஐ.டியில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த எரிசக்தி அமைச்சர்

கொழும்பு, ஓக 18

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலியக் களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

எரிபொருள் கொள்வனவு, பரிந்துரைகளை மதிப்பீடு செய்தல், முன்பதிவு செய்தவர்களுக்கு எரிபொருள் வழங்காமை, விநியோகஸ்தர்கள் தெரிவு மற்றும் விநியோக முறைமை தொடர்பில் குறித்த நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *