கிழக்குமாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசிய விடுதலை மக்கள் முண்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆளுனராக பதவி வகித்து வரும் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்துக்கு கிடைத்த பலன் ஒன்றுமில்லை. இந்த பதவி முழுமையாக அரசியல் ரீதியாக மக்களால் தெரிவாகும் உயர் நிலை பதவி இல்லையென்றாலும் தற்போதைய மாகாண சபை இடைநிறுத்தி இருப்பதால் மாகாண ஆட்சி சம்பந்தப்பட்ட முழு அதிகாரமும் இவரிடம் இருந்து வரும் நிலையில் இவரால் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த பலன் ஒன்று கூட கிடையாது.

கிழக்குமாகாண ஆளுனராக கிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறோம்.

இது சம்பந்தமாக எதிர்வரும் 23/08/2022 ந் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சி தலைவர்களுக்கு நடைபெற இருக்கும் யாப்பு திருத்த கலந்துரையாடலின் போது தனக்கான சந்தர்ப்பம் கிடைத்தால் இது சம்பந்தமாக தெளிவாக பேச உள்ளேன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *