வடக்கு அயர்லாந்தில் குரங்கு காய்ச்சலால் 27பேர் பாதிப்பு!

வடக்கு அயர்லாந்தில் குரங்கு காய்ச்சலால் 27பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமாக ஓரினச்சேர்க்கை மற்றும் இருபால் ஆண்களுக்கே அதிக தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குரங்கு காய்ச்சலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எவருக்கும் பெரியம்மை தடுப்பூசி வழங்கப்படும் என பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு அயர்லாந்திற்கு சுமார் 1,120 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, தற்போது 2,500பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி குரங்கு காய்ச்சலைத் தடுப்பதில் 85 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *